என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "என்எல்சி தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை"
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் பழமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது46). என்.எல்.சி. தொழிலாளி இவர் சிதம்பரத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் .
பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 அரை பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகள், மற்றும் வீட்டில் இருந்த டி.வி. மற்றும் சில பொருட்களை திருடி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை, பட்டு புடவைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும்.
இது குறித்து ஊ.மங்கலம் போலீசில் முருகன் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை- பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்